நீ காதலை மறைத்தாய் என்று நினைத்து என்னுள் இருந்த கவிஞனை தேடி பிடித்தேன் ...
நீ காதலை மறந்தாய் என்று எண்ணி கவிதை எழுதுவதை குறைத்தேன் ...
நீ காதலை மறுத்தாய் என்று அறிந்ததும் கண்டு எடுத்த இடத்திலயே கவிஞனை மீண்டும் தொலைத்தேன் ...
ISO:9001 tamil poems
நீ காதலை மறைத்தாய் என்று நினைத்து என்னுள் இருந்த கவிஞனை தேடி பிடித்தேன் ...
நீ காதலை மறந்தாய் என்று எண்ணி கவிதை எழுதுவதை குறைத்தேன் ...
நீ காதலை மறுத்தாய் என்று அறிந்ததும் கண்டு எடுத்த இடத்திலயே கவிஞனை மீண்டும் தொலைத்தேன் ...
அன்று ,என் வயது 12.
அடுத்த வாரம் வரும் தீபாவளிக்காக ,
தேடி பிடித்து வாங்கினேன் வித விதமான பட்டாசுக்களை .
வாரம் முழுவதும் கனவுகள் ,
கனவுகள் முழுவதும் பட்டாசுகள் .
தீபாவளியும் வந்தது ....."மழையோடு" ,
வானை பார்த்தே நான் சொன்னேன்
" நீ அழும் வரை , நானும் அழுவேன் என்று"
அன்றைய தினம்,
தீபாவளி பலகாரம் அன்று எனக்கு இனிக்கவில்லை .
புது துணி மீதும் எனக்கு விருப்பம் இல்லை .
அது ஏனோ தெரியவில்லை ,
பக்கத்து ஊரில் என் நண்பன் ,
வைத்த வெடியை கூட ரசிக்கும் பக்குவம் எனக்கு இல்லை .
இந்த ஈரமான மண்ணும் ,ஈரமான கண்ணும் காய்வது எப்போது?
என் மனதின் காயங்கள் மறையும் அப்போது.
இன்று, என் வயது 22.
அன்றைய தீபாவளி போல ,
இன்றைய வாழ்கைக்காக தேடி பிடித்தேன் ஒரு வேலையை.
அன்றைய பட்டாசு கனவுகளை போல,
வேலைக்கு செல்கிறேன் கனவில் மட்டும் .
மழை நிற்க விண்ணை பார்த்தேன் அன்று,
கால் லெட்டர்காக கணிணியை பார்க்கிறேன் இன்று .
அன்றைய பக்கத்து ஊர் நண்பனை போல,
இன்றைய வேலைக்கு செல்லும் நண்பர்கள்.
இது கதையா கவிதையோ என்று எனக்கு தெரியது ?
ஆனால் ஒன்று மட்டும் உண்மை ,
இந்த கதையின் விதையும் ,இந்த கவிதையின் கதையும்
தீரும் நாளே எனக்கு தீபாவளி.
யானைக்கும் அடிசறுக்கவது போல ,
ஞானிக்கும் ஞாபகமறதி வருவது போல
எனக்கும் சின்ன பித்து பிடித்து விட்டதா ???
"உன்னை விட ஒரு அழகான கவிதை எழுத ,
இந்த இரவை எரித்து கொண்டு இருக்கிறேனே ;)
மழை வந்தது எதனால் ??
புயல் கடல் கடந்ததாலா....
பெண்ணே நீ என்னை கடந்ததாலா...
மின்னல் தாக்கி மின்னல் இறக்க கூடும்...
மழையில் வெளியில் நடக்காதே ......
மழை சாரல்லும் மண் வாசமும் போல ...
என் இமையை விட்டு மறையாதே
நம் திறமைகள் கற்பூரம் போன்றது ...
கண் காணாமல் விட்டால் காற்றாய் கரைந்துவிடும் ...
கண்டுகொண்டு விட்டால் கடவுளையே நமக்கு கண்காட்டும் ....
உன் திறமையை தேடி பிடி...
வெற்றிக்கு அதுவே முதல் படி...
அன்பே நி சூரியன் என்றால் என் கவிதைகள் வெண்நிலவு அடி ..
தேயிந்தாலும் சரி ...
வளர்ந்தாலும் சரி....
ஒளிர்வது உன்னால் தான் ....
என்னை மட்டும் எரிக்கும் சூரியனே......
கடல் நீரை கரைத்து உப்பு எடுப்பது போல் ...
என் கண்ணீரை கரைத்து உயிர் எடுத்து விடு ......