phone cards
calling card
cheap hand bag
Credit Cards
web hosting

Sunday, October 26, 2008

தீபாவளி .அன்றும் .இன்றும் :(

அன்று ,என் வயது 12.
அடுத்த வாரம் வரும் தீபாவளிக்காக ,
தேடி பிடித்து வாங்கினேன் வித விதமான பட்டாசுக்களை .

வாரம் முழுவதும் கனவுகள் ,

கனவுகள் முழுவதும் பட்டாசுகள் .


தீபாவளியும் வந்தது ....."மழையோடு" ,

வானை பார்த்தே நான் சொன்னேன்
" நீ அழும் வரை , நானும் அழுவேன் என்று"


அன்றைய தினம்,

தீபாவளி பலகாரம் அன்று எனக்கு இனிக்கவில்லை .
புது துணி மீதும் எனக்கு விருப்பம் இல்லை .

அது ஏனோ தெரியவில்லை ,
பக்கத்து ஊரில் என் நண்பன் ,
வைத்த வெடியை கூட ரசிக்கும் பக்குவம் எனக்கு இல்லை .

இந்த ஈரமான மண்ணும் ,ஈரமான கண்ணும் காய்வது எப்போது?
என் மனதின் காயங்கள் மறையும் அப்போது.

இன்று, என் வயது 22.
அன்றைய தீபாவளி போல ,
இன்றைய வாழ்கைக்காக தேடி பிடித்தேன் ஒரு வேலையை.

அன்றைய பட்டாசு கனவுகளை போல,
வேலைக்கு செல்கிறேன் கனவில் மட்டும் .

மழை நிற்க விண்ணை பார்த்தேன் அன்று,
கால் லெட்டர்காக கணிணியை பார்க்கிறேன் இன்று .


அன்றைய பக்கத்து ஊர் நண்பனை போல,

இன்றைய வேலைக்கு செல்லும் நண்பர்கள்.

இது கதையா கவிதையோ என்று எனக்கு தெரியது ?


ஆனால் ஒன்று மட்டும் உண்மை ,


இந்த கதையின் விதையும் ,இந்த கவிதையின் கதையும்

தீரும் நாளே எனக்கு தீபாவளி.




7 comments:

Anonymous said...

really superb. all of them waiting for call letter should read this.

Yogu said...

@balaji

ya ya.life really sucks these days :(

Divya said...

அழகான எழுத்துக்கள்......உங்கள் ஆழமான மன உணர்வை அற்புதமாக பிரதிபலிக்கின்றன:-)

SenthilKumar said...

our exact feelings...... :(

சுரேந்திரா said...

machan... adhan doj vandhuruchulla.. cheers then!!

Yogu said...

@surendra

ya ya..inimey party taan..:)

preethi said...

really superb!! hope ur diwali has come already!