phone cards
calling card
cheap hand bag
Credit Cards
web hosting

Thursday, August 28, 2008

பூ..

முள் உள்ள பூக்களில் சிறிந்தது ரோஜா ..

முள் இல்லாதா பூக்களில் சிறந்தது நீ ..

Saturday, August 16, 2008

திறமை ...

நம் திறமைகள் கற்பூரம் போன்றது ...

கண் காணாமல் விட்டால் காற்றாய் கரைந்துவிடும் ...

கண்டுகொண்டு விட்டால் கடவுளையே நமக்கு கண்காட்டும் ....

உன் திறமையை தேடி பிடி...

வெற்றிக்கு அதுவே முதல் படி...

Sunday, August 10, 2008

இந்தியனின் ஒலிம்பிக்ஸ் ஏக்கம் :(


பதக்க பட்டியலில் முதல் இடத்தை நோக்கி சீனா...
பதக்க பட்டியலில் ஒரு இடத்தை நோக்கி நாம் ...

ஆங்கிலத்தில் சொன்னால் ...

we SEARCH for a medal..
while chinese MARCH towards it...

இனியாவது ...

நம் ஏக்கம் தீர .....
நம் பிஞ்சுகளுக்கு ......

உணவோடு பதக்க கனவுயும் ஊட்டுங்கள் ...

Thursday, August 7, 2008

சஹாரா ..

என் கவிதையும் கள்ளி செடியும் ஒன்று தான் ....
ஊர் எல்லாம் அதில் உள்ள முட்களை தான் பார்த்தார்கள் ....
அவள் மட்டும் தான் அதில் கூட உள்ள சிறு பூவையும் பார்த்தாள் :)

Tuesday, August 5, 2008

உயிர் நீர் ...

அன்பே நி சூரியன் என்றால் என் கவிதைகள் வெண்நிலவு அடி ..

தேயிந்தாலும் சரி ...

வளர்ந்தாலும் சரி....

ஒளிர்வது உன்னால் தான் ....

என்னை மட்டும் எரிக்கும் சூரியனே......

கடல் நீரை கரைத்து உப்பு எடுப்பது போல் ...

என் கண்ணீரை கரைத்து உயிர் எடுத்து விடு ......

Monday, August 4, 2008

PAIN:THE SHAPE OF LOVE

விளை நிலத்தில் விதையை போட்டு முடி
மழைக்காக கார்த்திருக்கும் விவசாயி போல் ..

என்னவள் பார்வைக்காக கார்த்திருன்தேன் நான் ...

ஹ்ம்ம் ......


வளையல்கள் எல்லாமே வட்டமடி ...
காதலின் இனிமையே இந்தா கஷ்டமடி ...

Sunday, August 3, 2008

காதல் மழை

வதைக்கும் வெயிலால் தொண்டையில் தாகம் ....
அவளை பார்க்காததால் நெஞ்சில் சின்ன சோகம் ...

தவமாய் கிடந்தேன் ...
வரமாய் வந்தாள்.....

அப்போது கையில் விழுந்தது சில மழை துளிகள்...
ஹம்ம்ம்....

மின்னல் வந்தால் மழை வந்து தானே ஆக வேண்டும் :)..
பின்பு தீர்த்தமாய் குடித்தேன் அந்த மழை துளிகளை ...

தாகம் தணியவில்லை....
அவளை பார்க்காத சோகம் தணிந்தது ......

Saturday, August 2, 2008

என் கண்ணீர் ஏன் சுடுகின்றது ??

எரியாத மெழுகுவர்த்தியை என் நெஞ்சம் இருந்தது....
ஏற்றி வைத்தது உன் நினைவுகள் ..
உருகும் மெழுகு போல்வழியும் கண்ணீர்...


கண்ணீர் சுடும் காரணம் இது தானோ ???

தாகம்

நீர் இன்றி வாடும் நிலம்
போல்நீ இன்றி என் நெஞ்சம் வாடுது